1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BPharm nursing course application from august 1

பி.பார்ம், நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது?

nursing
பி.பார்ம், மற்றும் நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
தமிழகத்தில் சமீபத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யும் அவகாசம் முடிவடைந்தது என்பதை பார்த்தோம் 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது
 
ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலம் இருப்பதால் அதற்குள் மாணவ-மாணவிகள் தங்களது விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இன்னும் சில மணி நேரங்களில் மாவட்டங்களில் கனமழை: வானிலை அறிவிப்பு