வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 அக்டோபர் 2019 (14:01 IST)

பட்டபகலில் வெடிகுண்டு தாக்குதல்: சென்னையில் பரபரப்பு!!

சென்னையில் பட்டபகலில் ரிச்சி தெருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை ரிச்சி தெருவில் அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 6 பேர் கொண்ட ரவுடி கும்பல். 
 
சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பட்டப்பகலில் நடந்துள்ள சம்பவம் போலீஸாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொலை முயற்சியி ஈடுப்பட்டு தப்பி ஓடிய 6 பேர் சேர்ந்த கும்பலலுக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.