தொடர்புடைய செய்திகள்
- நம்ம நடராஜனுக்கு சொந்த ஊர் மக்கள் மேளதாள வரவேற்பு !
- ஸ்மித்துக்கு டாட்டா காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்! – கேப்டன் ஆகும் சஞ்சு சாம்சன்!
- வரலாற்று வெற்றியை புகழும் உலக செய்தித்தாள்கள்! – ஐசிசி வெளியிட்ட புகைப்படம்!
- ஹிட் லிஸ்டில் ரெய்னா, ஜாதவ்.. ஆனா தோனி மனசு வெச்சா..? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
- என் காண்ட்ராக்ட் முடிஞ்சிட்டு போய்ட்டு வரேன் மக்கா! – சிஎஸ்கேவுக்கு விடை கொடுத்த ஹர்பஜன்!
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்; பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது!
இந்தியா – இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டி எதிர்வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டம் 5ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்திலிருந்து முன்கூட்டியே வரும் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை காண பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
