1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Arakonam mp balu says about jegathratchagan

1000 கோடி ரூபாய் கொடுத்து ராஜ்யசபா சீட் கேட்டாரா ஜெகத்ரட்சகன்? பாமக வேட்பாளர் பகீர் குற்றச்சாட்டு..!

அரக்கோணம் தொகுதி
அரக்கோணத்தில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டு இருக்கும் ஜெகத்ரட்சகன் அவருடைய தலைவரிடம் ஆயிரம் கோடி ரூபாய் தருகிறேன், எனக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து விடுங்கள், என்னால் அரக்கோணத்தில் மீண்டும் போட்டியிட முடியாது என்று கூறியதாக பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பாலு என்பவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அரக்கோணம் பக்கம்  ஜெகத்ரட்சகன் எம்பி தலை காட்டவே இல்லை என்றும் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட அவர் நிறைவேற்றவில்லை என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் ஜெகத்ரட்சகன் எத்தனை கேள்விகளை எழுப்பினார் என்றும் சரமாரியாக அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு கூறியுள்ளார்

அரக்கோணம் தொகுதியில் ஜெயிக்க முடியாது என்பதால் ஆயிரம் கோடி ரூபாய் தருகிறேன் எனக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து விடுங்கள் என்று அவர் தன் தலைவரிடம் கேட்டதாகவும் ஆனால் அந்த தலைவர் நீங்கள் தான் போட்டியிட வேண்டும் அந்த தொகுதிக்கு நீங்கள் தான் சரியான நபர் என்று சொல்லி மீண்டும் அரக்கோணத்திற்கு அனுப்பி விட்டதாகவும் பாமக வேட்பாளர் பாலு கூறியுள்ளார்.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அப்ரூவராக மாறுவேன்: சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அதிரடி..!