107 எம்.எல்.ஏக்களின் பெயரை விஜய் சொல்லிட்டா!... ஆர்.பி.உதயகுமார் சவால்!.
முதலமைச்சர் விஜய் எப்போதெல்லாம் அதிமுக விமர்சிக்கிறாரோ அப்போதெல்லாம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தவெகவுக்கு எதிராகவும், முதலமைச்சர் விஜய்க்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார். சமீபத்தில் கரூரில் பேசிய முதல்வர் விஜய் அதிமுகவும், திமுகவும் கூட்டு களவாணிகள்தான் என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஆர்.பி உதயகுமார் சமூக வலைதளங்களில் பல ஆயிரம் கோடிகளை இறைத்து கவர்ச்சியான வசனங்கள் மூலம் ஜென்சி தலைமுறையை மூளைச்சலவை செய்து விஜய் இந்த வெற்றியை பெற்றுள்ளார். கொள்கை இல்லாத இந்த விபரீத அரசியல் போக்கால் தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும்.. பெரும்பான்மையை நிரூபிக்க குறுக்கு வழியை தேடும் விஜயிடம் கேள்வியெழுப்பினால் மௌனமே பதிலாக கிடைக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்..
மேலும் தவெகவின் 17 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தை பார்த்து அவர்களின் பெயரை முதலமைச்சர் விஜய் சொல்லிவிட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்தே விலகி விடுகிறேன் என அவர் சவால் விட்டிருக்கிறார்.
சமீபத்தில் கூட முதலமைச்சர் விஜய் கரூர் சம்பவத்தால பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுத்து தொடர்பாக கருத்து தெரிவித்த ஆர்.பி உதயகுமார் ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க விஜய். மக்கள் பணத்தில் தவெக கட்சியை வளர்க்க நினைத்தால் தமிழகத்தில் இளைய சமுதாய புரட்சி வெடிக்கும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
இதற்கு பதிலடி கொடுத்த ஆர்.பி உதயகுமார் சமூக வலைதளங்களில் பல ஆயிரம் கோடிகளை இறைத்து கவர்ச்சியான வசனங்கள் மூலம் ஜென்சி தலைமுறையை மூளைச்சலவை செய்து விஜய் இந்த வெற்றியை பெற்றுள்ளார். கொள்கை இல்லாத இந்த விபரீத அரசியல் போக்கால் தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும்.. பெரும்பான்மையை நிரூபிக்க குறுக்கு வழியை தேடும் விஜயிடம் கேள்வியெழுப்பினால் மௌனமே பதிலாக கிடைக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்..
மேலும் தவெகவின் 17 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தை பார்த்து அவர்களின் பெயரை முதலமைச்சர் விஜய் சொல்லிவிட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்தே விலகி விடுகிறேன் என அவர் சவால் விட்டிருக்கிறார்.
