1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK plans for meeting today at 5 PM

பீதியில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ? அவசர ஆலோசனைக்கு அவசியம் என்ன??

Sasikala
இன்று மாலை 5 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. தற்போது பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் வரும் 8 ஆம் தேதி சென்னை வருகிறார். 
 
சசிகலா வருகையை வரவேற்கும் விதமாக அதிமுகவை சேர்ந்த சிலரே போஸ்டர்களை ஒட்டி கொண்டாடி வருகின்றனர். இதனால் சிலரை கட்சியை விட்டு நீக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் அதிமுகவின் தலைவர்கள். 
 
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர். சசிகலா வரும் வேலையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்துவது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
7 பேர் விடுதலை காலதாமதம்: தமிழக ஆளுநருக்கு விஜயகாந்த் கண்டனம்!