1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (13:37 IST)

சசிகலாவுக்கு எதிராக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார்…

ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக் காலம் முடிந்த நிலையில் சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா வரும் 8ஆம் தேதி தமிழக வரவுள்ளார். 

அவரை வரவேற்க தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில், அவர் அண்மையில் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்ஸார்ஜ் ஆனபோது, தனது காரில் கொடியில் அதிமுக கொடி கட்டியிருந்தார்.அவர் அதிமுக பொதுச்செயலாளர் அதனால் அவர் அக்கொடியைப் பயன்படுத்த உரிமை உண்டு என தினகரன் கூறி இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனக் கூறினார்.

இந்நிலையில் அதிமுக கொடியைப் பயன்படுத்தியதுதொடர்பாக சசிகலா மீது புகாரளிக்க தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் சென்னை டிஜிபி அலுவலத்தில் புகாரளித்துள்ளனர். இதனால்  சசிகலா ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.