1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk candidate ask vote to flying squad

காரில் சோதனை செய்த பறக்கும் படை அதிகாரியிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்..!

பறக்கும் படை
தூத்துக்குடியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அந்த வேட்பாளர் சோதனை செய்த அதிகாரிகளிடம் தனக்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 கடந்த சில நாட்களாகவே பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும் இந்த சோதனையில் கோடிக்கணக்கான பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
இந்த நிலையில் கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர் சிவசாமி வேலுமணி காரில் சென்று கொண்டிருந்த போது அவரது காரை மறித்து பறக்கும்படி அதிகாரிகள் சோதனை செய்தனர்
 
சோதனைக்கு பின் அவரது காரில் பணம் பொருள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அவரது காரை செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். அப்போது பறக்கும் படை அதிகாரிகளிடம் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேட்பாளர் ஆர் சிவசாமி  வேலுமணி கூறினார். இதற்கு பறக்கும் படை அதிகாரிகள் சிரித்துக்கொண்டே சரி என்று பதில் அளித்தனர் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தெலுங்கு தேசம் வெற்றி பெற்றால் மாதந்தோறும் ரூ. 4 ஆயிரம் உதவித் தொகை..! சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு..!!