தொடர்புடைய செய்திகள்
- தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு - மருத்துவர்களை சிறைபிடித்து சரமாறியாக அடித்த உறவினர்கள்..
- 8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியா? தமிழக சுகாதாரத்துறை அளித்த விளக்கம்..!
- ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் தனியார் மருத்துவமனைக்கு அனுமதி: மருத்துவதுறை அமைச்சர் அருண்ராஜ்
- 234 தொகுதியிலும் தோல்வி.. காரைக்குடியில் சீமானுக்கு 4வது இடம்.. இனிமேலும் கட்சி நடத்தனுமா?
- காரைக்குடியில் நாளை விஜய் பிரச்சாரம்!.. மரங்களுக்கு Z+ பாதுகாப்பு!. இது புதுசா இருக்கு!...
தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை: சிறுவனின் ஆணுறுப்பு அகற்றம், மருத்துவர்களின் ஆடியோவால் பரபரப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சிறுவன் ஒருவனுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவனது ஆணுறுப்பை அகற்ற வேண்டிய கொடூர நிலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், இப்போராட்டத்தை திசைதிருப்ப மருத்துவர்கள் சிலர் சதித் திட்டம் தீட்டியது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்துக் கூட்டத்தைக் கலைத்துவிடலாமா?" என்று ஒரு மருத்துவர் கேட்க, "அப்படிக் கொடுத்திருந்தால் இதை வைத்தே பிரச்சினையை திசை திருப்பியிருக்கலாம்" என்று மற்றொரு மருத்துவர் பேசும் உரையாடல் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி கேட்கும் போராட்டத்தைக் காசு கொடுத்துக் கலைக்க நினைத்த மருத்துவர்களின் இந்த மனிதாபிமானமற்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசாரும் மருத்துவத் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Siva
