தலைவர் விஜய் இதனால்தான் கண் கலங்கினார்!.. ஆதவ் அர்ஜுனா ஒபன்!...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தவெக சார்பில் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.. சென்னையிலிருந்து காரில் அவர் நான்கு மணி நேரம் பயணித்து வேலூர் சென்றார். அவர் செல்லும் வழியெங்கும் பொதுமக்களும், விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் அவரை பார்ப்பதற்காக காத்திருந்தனர். விஜய் காரில் வருவதை பார்த்த போது பலரும் கைகாட்டினார்கள், பலர் அவரின் காரின் முன்பு நின்று செல்பி போட்டோ எடுத்துக் கொண்டனர். முடிந்தவரை எல்லோருக்கும் கை காட்டினார் விஜய்..
அதன்பின் வேலூரில் பேசிய விஜய் என்னை நீங்கள் திட்டினால் மக்களை திட்டுவது போல.. எனக்கு அரசியல் தெரியாது என்றால் மக்களுக்கு அரசியல் தெரியாது என்று சொல்வது போல.. என்னை நீங்கள் இழிவாக பேசினால் அது மக்களை இழிவாக பேசுவதற்கு சமம்.. என்னையும் மக்களையும் பிரிக்கவே முடியாது.. நான்தான் தமிழ்நாடு.. தமிழ்நாடுதான் நான்.. என்னையும் மக்களையும் பிரிக்கவே முடியாது.. எனக்கும் மக்களுக்கும் இடையே இருப்பது சென்சிட்டிவான சென்டிமென்ட் என உணர்ச்சி பொங்க பேசினார். அதன் பின் இரண்டு மூன்று நிமிடங்கள் ஏதும் பேச முடியாமல் கண் கலங்கினார்..
இந்நிலையில், தவெக விழா ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா வேலூரில் தலைவர் என் கண் கலங்கினார் தெரியுமா?..கரூரோட வலி.. அதுமட்டுமல்ல.. சென்னையிலிருந்து வேலூர் வரைக்கும் வழியெங்கும் 2 லட்சம் பேர் நிக்குறாங்க.. அவங்க உணர்வுகளில் பங்கு கொள்ள முடியலயேங்கிற ஆதங்கம்.. அந்த வலியிலதான் கண்கலங்கினார்.. எம்ஜிஆரையும், புரட்சித்தலைவையும் இப்படித்தான் கண்கலங்க வச்சாங்க.. அதனாலதான் அவங்க ரெண்டு பேரும் திமுகவ ஓட ஓட விரட்டினாங்க.. அவர்களுக்கு அப்புறம் திமுக பார்த்து பயந்த ஒரே தலைவர் விஜய்தான் என அவர் பேசியிருக்கிறார்.