1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actress Shanthini case, police investigation

நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு நடந்தது உண்மையா? மருத்துவமனையில் விசாரணை

கருக்கலைப்பு
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கூறிய சாந்தினி தான் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக கூறிய நிலையில் அவர் உண்மையில் கருக்கலைப்பு செய்தாரா என்பது குறித்த விசாரணையை தற்போது போலீசார் செய்துவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சாந்தினி கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனையின் டாக்டர் மணிகண்டனின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்பட்டு வருவதை அடுத்து அவரது மருத்துவமனை விசாரணை வளையத்தில் உள்ளதாக தெரிகிறது 
 
அதுமட்டுமின்றி மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்த போது பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாலியல் குற்றம் மற்றும் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
6 வயது சிறுமியின் வீடியோ வைரல்: உடனடி நடவடிக்கை எடுத்த காஷ்மீர் கவர்னர்!