1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வழக்கு: தலைமறைவானதாக தகவல்!

நாடோடிகள் என்ற படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சாந்தினி முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் என்பவர் மீது பாலியல் புகார் கொடுத்தார் என்பதும் இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் வெளிவந்த தகவலை நேற்று பார்த்தோம்
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் அவர் தற்போது தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் காவல்துறையினர் விரைவில் அவரை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் ஐந்து வருடங்களாக குடும்பம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் தன்னை அடைத்துக் கொடுமைப் படுத்தியதாகவும் தன்னுடைய புகைப்படங்களை வைத்து மிரட்டி வருவதாகவும் நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.