1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2026 (11:40 IST)

பிரபலமாக இருந்தால் மட்டும் போதாது!.. விஜயை அட்டாக் பண்ணிய நாசர்!..

nassar
சினிமாவிலிருந்து அரசியலுக்கு நிறைய பேர் வந்து இருக்கிறார்கள்.. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த் என பலரும் அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அதில் வெற்றி பெற்று தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் எம்.ஜி.ஆர் மட்டுமே. அரசியலில் எம்.ஜி.ஆருக்கு கொடுத்த வரவேற்பை மக்கள் வேறு யாருக்கும் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதில் விஜயகாந்த் மட்டும் எதிர்கட்சி தலைவர் வரை சென்றார்.

ரஜினி அரசியலுக்கு வருவதாக 25 வருடம் சொல்லிக்கொண்டு இருந்து பின் பின்வாங்கினார்.. தற்போது விஜய் வந்திருக்கிறார். விஜய்க்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.. மக்களின் ஆதரவும் இருக்கிறது.. எனவே அவர்கள் தன்னை முதல்வராக அமர வைப்பார்கள் என விஜய் நம்புகிறார்.. வருகின்ற சட்டமன்ற தேர்தலை விஜயின் தவெக சந்திக்கவிருக்கிறது.

இந்நிலையில்தான், ஒரு திமுக நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாசர் ‘பிரபலமாக இருந்தால் மட்டும் போதும் என நினைத்துக் கொண்டு சிலர் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள்.. திட்டங்களை அறிவித்தால் போதாது.. கொள்கை வேண்டும்.. திட்டங்கள் மட்டுமே கொள்கை ஆகாது.. வரலாற்று சுவடுகள் இருக்க வேண்டுமே தவிர படங்களின் பட்டியலை வைத்து நான் அரசமைப்பேன் என்று சொல்வது தேவையற்றது’ என பேசியிருக்கிறார்..

எனது மகன் விஜயின் தீவிர ரசிகன்.. அவன் விபத்தில் சிக்கி படுக்கையில் இருந்தபோது விஜயை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டான்.. இதை சொன்னதுமே விஜய் வீட்டுக்கு வந்து என் மகனை பார்த்தார்.. விஜயை பார்த்த புத்துணர்ச்சியில் அவன் பிழைத்துவிட்டான் என்று நாசர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது..