தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான்: இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?
- முடிவிலா தொடர்கதையாய்... மீண்டும் பெரியார் சிலை சேதம்!!
- இந்த மூஞ்ச ஏற்கனவே பாத்திருக்கோமே..! நெட்டிசன்களிடம் சிக்கிய அருள்வாக்கு அன்னபூரணி!
- தடுப்பூசி போடாவிட்டால் துறைரீதியான நடவடிக்கை! – ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!
- மாணவர்களுக்கு தடுப்பூசி; நேரடியாக பள்ளிகளில் முகாம்! – தமிழக அரசு திட்டம்!
பள்ளிகளை திறக்க கூடாது - ஸ்டிக்டாய் சொன்ன மெட்ரிக் பள்ளி இயக்குநரகம்
ஜனவரி 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை.
வழக்கமாக கிறிஸ்மஸ் திருவிழாவையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என்பதும் இந்த விடுமுறை ஜனவரி முதல் வாரம் வரை தொடரும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.
பின்னர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறந்து வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் ஆணையிட்டுள்ளது.
