1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (15:56 IST)

இருசக்கர வாகனத்தில் புகுந்த 5 அடி பாம்பு... அரண்டு போன மக்கள் !

நெல்லை பேருந்து நிலையத்தில்   நின்றிருந்த இருசக்கர வாகனங்களுக்குள் புகுந்த ஐந்து அடி நல்ல பாம்பு அதன் எஞ்சினுக்குள் புகுந்தது.

அதைப் பிடிக்க சிலர் முயன்ற போது, வாகனத்தில்  ஏற்றி  எஞ்சினுக்குள் புகுந்து கொண்டது.

அப்போது அந்த வாகனத்தின்  ஓட்டுநர் பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, சூடு தாங்காமல் பாம்பு அடுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கில் ஏறியது. உடனே கம்பினால் அதைப் பிடிக்க முயன்றபோது காயம் அடைந்த பாம்பு உயிரிழந்தது.