1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2019 (13:25 IST)

5 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம்..

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பணி நடைபெறுவதால், ஐந்து நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பணி நடைபெறுவதால் நவம்பர் 11 முதல் 15 வரை தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01,9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படவுள்ளதாகவும், அந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை இயங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.15 மற்றும் 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் பகுதியில் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த ரயில்கள் தாம்பரம்-கடற்கரை வரை இயக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50 காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படும் எனவும், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை வரை அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.