1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (17:48 IST)

43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் !

மதுரையில் பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  போன்ற மாவட்டக்களை அடுத்து, மதுரையிலும் பொது ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகமாகப் பரவி வந்ததை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

இந்நிலையில், மதுரையில் பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.