1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜூலை 2022 (15:40 IST)

குஜராத்தில் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு!

Kejriwal
ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
 
டெல்லியில் முதலில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக பஞ்சாபில் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக குஜராத் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தையும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது 
 
இதற்காக தற்போது அக்கட்சியின் கட்சியினர் தேர்தல் வேலையை தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனி மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிரடி அறிவிப்புகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது