1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (08:15 IST)

கனமழை எதிரொலி... 27 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக இன்று தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. 
 
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இன்று தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி கள்ளக்குறிச்சி, கரூர், வேலூர் , நாமக்கல், ராணிப்பேட்டை, தேனி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, திருச்சி, கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை. 
 
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்டுகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.