1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomorrow also schools, colleges leave

கனமழை எதிரொலி: நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பள்ளிகள்
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் நாளையும் ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
ஏற்கனவே புதுக்கோட்டை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சற்றுமுன் வெளியான தகவலின்படி மிக பலத்த மழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பா?