1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 12 corona control regions in Chennai

கடந்த மாதம் 500, இந்த மாதம் 12: சென்னையில் குறைந்த கொரோனா கட்டுப்பாடு பகுதிகள்!

கொரோனா
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 500க்கும் மேற்பட்ட காரணம் கட்டுப்பாடு பகுதிகள் இருந்தது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையராக புதிதாக பதவியேற்ற சுகன் தீப்சிங் அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டு பகுதிகள் குறைந்து வந்தன 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னையில் 12 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே இருப்பதாகவும் இந்த பகுதிகளும் மிக விரைவில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து விடுபடும் என்றும் கூறப்படுகிறது
 
சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக சென்னை படிப்படியாக கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த மாதம் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று சுமார்  500 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
கருப்பு பூஞ்சை பாதிப்பு… மூன்று சிறுமிகளின் கண்கள் நீக்கம்!