1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (11:15 IST)

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ.....மாணவர்கள் கைது !

Students Arrested For Supporting Pakistan

பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட மூன்று மாணவர்களை கர்நாடகாவில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கே.எல்.என்ற பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இங்கு காஷ்மீரை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 
 
இதனையடுத்து, மூன்று மாணவர்களையும் போலீஸர் கைது செய்துள்ளனர். பல்கலைக் கழகத்தில் சார்பிலும் அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
மூன்று மாணவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.