1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (11:32 IST)

கைலாஷ் யாத்திரை சென்ற தமிழர் திடீர் மரணம்:

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வரும் நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் கைலாஷ் யாத்திரயில் நாடு முழுவதிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் கனமழை காரணமாக கைலாஷ் யாத்திரைக்கு சென்ற தமிழர்கள் பலர் நேபாள நாட்டில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழர் ஒருவர் திடிரென மரணம் அடைந்துள்ளார். மரணம் அடைந்தவர் ஆண்டிபட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்றும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்தார் என்றும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ராமச்சந்திரனின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவருடைய  உறவினர்கள் தமிழக கோரிக்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.