நேபாள நாட்டில் உள்ள மந்திரிகள் இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மடிக்கணினிகளை இயக்க பழக வேண்டும் என்றும் அவ்வாறு பழகவில்லை என்றால் அவர்களுடைய மந்திரி பதவி நீக்கப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒளி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்நாட்டு அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நேபாள நாட்டின் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகியுள்ள ஒளி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது விரைவில்...