1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (20:22 IST)

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்: தளபதி அமித் தேவ்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் ஒருநாள் இந்தியாவின் பகுதியாக மாறும் என மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி அமித் தேவ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தபோது காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது என்பதும் இந்த பகுதி தற்போது பாகிஸ்தானால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி அமித் தேவ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தீவிரவாதிகள் அற்ற சுதந்திரமான காஷ்மீர் விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.