1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. RSS Demands Impartial Probe in Ayodhya Ram Temple Donation Scam; SIT Arrests Eight Suspects

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை பணம் மோசடி.. ஆர்.எஸ்.எஸ். கூறிய அதிர்ச்சி கருத்து...

ayothi
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகார்கள் நாடு முழுவதும் உள்ள ராம பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த விவகாரம் குறித்து ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், இந்த மோசடி சம்பவம் பக்தர்களின் மனதை ஆழமாக புண்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இந்த சிறப்புப் படை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி உண்மைகளை கொண்டுவரும் என ஆர்.எஸ்.எஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
 
இதற்கிடையில், இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி இந்து மதத்திற்கு எதிராக தவறான தகவல்களை பரப்ப முயலும் சில அமைப்புகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும், இந்து சமூகம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஹோசபாலே கேட்டுக்கொண்டுள்ளார்.
 
தற்போது தீவிரமாக நடந்து வரும் இந்த விசாரணையில், சம்பத் ராயின் நெருங்கிய உதவியாளர் தின்னு யாதவ் உட்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.77 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைகள் மற்றும் கட்டுமானச் செலவுகள் குறித்து மறு தணிக்கை  செய்யவும் சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவெடுத்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
5.04 கோடி ரூபாய்மதிப்புள்ள ஆடம்பர காரில் சறுக்கு விளையாடி சேதப்படுத்திய சிறுவர்கள்... பெற்றோர் மீது வழக்கு...