1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Train Carrying RSS Chief Mohan Bhagwat Target conferred with Stone Pelting; Window Damaged

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பயணம் செய்த ரயில் மீது கல்வீச்சு.. என்ன நடந்தது?

மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பயணம் செய்த ரயிலை குறிவைத்து மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் காரணமாக, அவர் அமர்ந்திருந்த ரயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்து பலத்த சேதமடைந்தது.
 
இருப்பினும், இந்த அதிர்ச்சிகரமான கல்வீச்சு சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், அவர் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளார் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து, ரயில் சில நிமிடங்கள் சம்பவ இடத்திலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது.
 
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் ரயிலை முழுமையாக சோதனையிட்ட பிறகு, சிறிது நேர தாமதத்துடன் ரயில் தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், விஐபி பாதுகாப்புப் பிரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும், ரயிலின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டாதீங்க சி.எம். சார்!.. உதயநிதி டிவிட்!..