தொடர்புடைய செய்திகள்
- பயணிகளை ஏற்றிச்செல்லும் டெமோ ரயிலில் பின்பக்கம் இணைக்கப்பட்டுள்ள எஞ்சின் பெட்டியில் திடீரென தீப்புகை- பயணிகள் அலறி அடித்துக் ஓட்டம்!
- தீபாவளிக்கு அரசு சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு.. ஒரு மணி நேரத்தில் டிக்கெட் காலி..!
- ஏர் இந்தியா விமானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..! டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு..!!
- கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
- திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: பயணிகள் அவதி..!
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது? ரயில்வே துறை தகவல்..!
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி, பொங்கல் உள்பட முக்கிய பண்டிகை நாட்களில் சென்னையில் இருக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் முன்கூட்டியே முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கும் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகை, 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, அதனை அடுத்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள் செப்டம்பர் 12ஆம் தேதியும், அதனை அடுத்து அடுத்தடுத்து பயணம் செய்ய விரும்பும் பயணிகள் அடுத்தடுத்த நாட்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தென்னக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
