தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை எதிர்த்து மைக் பென்ஸ் போட்டியிட முடிவு..!
- ''ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காசோலை, வேலை''- முதல்வர் அறிவிப்பு
- ஒடிஷா ரயில் விபத்து: தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது- முதல்வர்
- தன்னை கத்தியால் குத்தியது பற்றி புத்தகம் எழுதும் சல்மான் ருஷ்டி
- ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஒடிஷா செல்லும் பாஜக உதவிக் குழு!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி.. இதற்கு முன் உரையாற்றிய பிரதமர்கள் யார் யார்?
பிரதமர் மோடி வரும் 22ஆம் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக செல்ல இருக்கும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஏற்கனவே பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில் தற்போது உரையாற்றுவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்செல் மண்டேலா ஆகிய வெகு சில உலக தலைவர்கள் மட்டுமே அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசியிருக்கும் நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அதுவும் இரண்டாவது முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், நரசிம்மராவ், ராஜீவ் காந்தி ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்திய நிலையில் தற்போது பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டு கூட்டத்தில் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, இந்திய அமெரிக்க நாடுகள் எதிர்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
