1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi apology time again says Rahul

பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கோர வேண்டிய நேரம் இது: ராகுல்காந்தி

பிரதமர்
பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமிது என ராகுல் காந்தி ஆவேசமாக கூறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
லக்கிம்பூர் கேரி வன்முறை திட்டமிட்ட சதி என்று விசாரணை குழு தகவல் வெளியிட்டுள்ளதை அடுத்தே ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் ஏற்பட்ட வன்முறை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வன்முறை திட்டமிட்ட சதி என விசாரணை குழு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை அடுத்து பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என காங்கிரஸ் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் 
 
மேலும் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சரவை முதலில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சமீபத்தில் விவசாயிகள் மசோதா திரும்பப் பெறும்போது பிரதமர் மன்னிப்பு கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!