1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. No patha yathra in thirupthi says devasthanam

இன்றும் நாளையும் பாதயாத்திரைக்கு தடை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி
ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்றும் நாளையும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரவேண்டாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
அந்தமான் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
குறிப்பாக இன்று ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்றும் நாளையும் திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது
 
இந்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் என்று அறிவித்துள்ள நிலையில் இன்றும் நாளையும் பக்தர்கள் பாதயாத்திரை அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட அரசு உத்தரவு!