தொடர்புடைய செய்திகள்
- பாஜக பிரமுகர் கல்யாண ராமனின் ஜாமின் மனு தள்ளுபடி
- #எக்ஸல்சீட்டு_அண்ணாமலை: டிவிட்டரில் கலாய்!
- பிரேக்கிங் நியூஸ் என்பது இதுதானா? ஊடகங்களுக்கு பாஜக பிரமுகர் கேள்வி!
- எங்களுக்கு ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
- ஊரக உள்ளாட்சி தேர்தல்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
மன்னிப்பு கேட்பீர்களா திருமாவளவன்? பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி
கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று இந்தியாவில் 100 கோடி பெயர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு பெரும் சாதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆரம்பத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன் தற்போது மன்னிப்பு கேட்பாரா என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்று மக்களை அச்சப்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்வதை தடுக்க முயன்ற திருமாவளவன் அவர்களே, இன்று நூறு கோடி தடுப்பூசியை செலுத்தியுள்ளது இந்தியா. நீங்கள் அன்று சொன்னதற்கு இன்று மன்னிப்பு கேட்பீர்களா? என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
