தொடர்புடைய செய்திகள்
- கூட்டணியை கூட ஒருங்கிணைக்கவே முடியாதவர்கள் இந்தியாவை எப்படி ஆள முடியும்.. ஓபிஎஸ்
- பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி ஓராண்டு கூட நிலைக்காது.. பிரசாந்த் கிஷோர் பேச்சு..!
- பாஜகவுடன் சேர்வதை விட உயிரை விடுவதே மேல் நிதிஷ் கூறிய வீடியோ டிரெண்ட்..
- முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்தி..அதிமுக, பாஜகவை எதிர்கொள்ள ஆலோசனை..!
- 21 தொகுதிகள் கொண்ட பட்டியல் தயாரானது உண்மையா? தமிழ்நாடு காங்கிரஸ் அறிக்கை..!
இனிமேல் அணி மாற மாட்டேன்: முதல்வர் பதவியேற்றதும் நிதிஷ்குமார் கொடுத்த உறுதி..!
பீகார் முதல்வர் நிதீஷ் குமார், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியிலிருந்து விலகி பாஜக ஆதரவுடன் மீண்டும் நேற்று மாலை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட நிலையில் இனிமேல் அணி மாற மாட்டேன் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து முறை கூட்டணி மாறியதால் நிதிஷ்குமார் மீது நன்பகத்தன்மை இல்லை என அரசியல் கட்சியினர் கூறிவரும் நிலையில் அவர் இந்த உறுதியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட நிதீஷ் குமார், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியோடு உறவு முடிந்து விட்டது என்றும் இனிமேல் அணி மாற மாட்டேன் என்றும் பீகார் வளர்ச்சிக்காக மட்டுமே நான் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பீகார் வளர்ச்சியை தவிர வேறு எதையும் செய்யப்போவதில்லை என்றும் நான் ஏற்கனவே எங்கு இருந்தேனோ, அங்கேயே தற்போது வந்திருக்கிறேன் என்றும் இனிமேல் வேறு எங்கேயும் போக மாட்டேன் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
