ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (13:59 IST)

நாளை நீட் தேர்வு முடிவுகள்: மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் தர கோரிக்கை!

NEET
நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதால் அனைத்து மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 
 
ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. சுமார் 18 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை  தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதி உள்ளனர் என்பதும் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவ மாணவிகள் தற்கொலை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நாளை நீட்தேர்வு வெளியாக இருப்பதால் மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது 
 
http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் நீட் தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.