1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mumbai drowning in rain water for last two weeks

மும்பையை மூழ்கடித்த மழை – வெளியேறிய மக்கள்

National News
கடந்த இரண்டு வாரங்களாக மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரமே மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்கள் பலர் பலவிதமான இயற்கை விபத்துகளால் உயிரிழந்து வருகின்றனர்.

மும்பையில் பெய்து வரும் கனமழையால் இறந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. வீதிகளில் பாய்ந்த வெள்ளம் அங்கு நின்ற வாகனங்களை அள்ளிப்போட்டு கொண்டு சுரங்கபாதையில் சென்று நிரம்பிவிட்டது. மீட்பு பணிகளில் தீயணைப்பு துறை, காவல் துறை, சமூக ஆர்வலர்கள் என பலர் பங்கெடுத்துள்ளனர். இன்று காலை புனேவில் மழை காரணமாக கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு மகாராஷ்டிர அரசு அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இன்று நடைப்பெறும் இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம்