1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mangalore auto blast is connected to ISIS?

மங்களூரு ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு சம்பவம்: ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா?

auto blast
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரில் நேற்று முன்தினம் மாலை திடீரென ஆட்டோ வெடித்து சிதறியது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட ஒரு சிலர் காயம் அடைந்தனர் 
 
இந்த நிலையில் இந்த ஆட்டோ வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்த கர்நாடக காவல்துறையினர் இது தீவிரவாதிகளின் சதி என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
 ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒருவரால் தான் ஆட்டோ வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
டிவிட்டரில் இணையுங்கள் என யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்: டிவிட்டர் துணைத் தலைவர்