தொடர்புடைய செய்திகள்
- மகாராஷ்டிராவில் அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து: 8 பேர் பலி!
- அதிகாலையில் வெளியான மிஷ்கினின் அடுத்த பட அறிவிப்பு!
- வீட்டை இடித்ததற்காக கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்கும் கங்கனா: பரபரப்பு தகவல்
- பாதிப்பில் ரஷ்யாவையும், மரணத்தில் ஸ்பெயினையும் முந்திய மகாராஷ்டிரா: அதிர்ச்சி தகவல்!
- உடம்பை ஆரோக்யமா வெச்சிக்கணும்! – அதிகாலையில் சைக்கிள் ஓட்டும் ஸ்டாலின்!
மகாராஷ்டிரா கட்டிட விபத்து... பலி எண்ணிக்கை 20-தை தொட்டது!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே என்ற பகுதியில் மூன்று அடுக்கு கொண்ட கட்டிடம் ஒன்று கடந்த 1984 ஆம் ஆண்டு கட்டியதாக தெரிகிறது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 21 வீடுகள் இருந்ததாகவும் அனைத்து வீடுகளிலும் பொது மக்கள் குடியிருந்ததாகவும் தெரிகிறது.
இதனிடையே நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென இந்த கட்டிடத்தின் பாதி அளவு சரிந்தது. இந்த கட்டிடத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்திலேயே பலர் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே 8 பேர் பலியாகினர் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டிட விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீட்க்கப்பட்டவர்களில் 36 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிய நிலையில் அதில் 10 பேர் உயிரிழந்ததால் மரண எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில் விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
