தொடர்புடைய செய்திகள்
- நாடு முழுவதும் 23% தடுப்பூசி வீணாக்கப்பட்டது; தமிழகம் முதலிடம் – மத்திய அரசு தகவல்
- தடுப்பூசி போட்டுக்கிட்டா தக்காளி தருவோம்! – சத்தீஸ்கரில் நூதன முயற்சி!
- இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் ஆலோசனை!
- கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க இந்தியா தவறியது எப்படி?
- இன்று முதல் சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை: காவல்துறை தகவல்
ஊரடங்கு எதிரொலி; குவிந்த பயணிகள் - மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!
டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பலர் வெளியேறிய நிலையில் பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு வார காலம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசம் குவாலியரில் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பயணித்த பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
