1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. gujarat man escaped from lion video

கவ்விப்பிடித்த சிங்கம்!.. பாசமாக தாடையை நீவி எஸ்கேப் ஆகிய நபர்!.. வைரல் வீடியோ!...

lion
குஜராத் மாநிலத்தில் சிங்கத்திடம் சிக்கி அரை மணி நேரம் கழித்து தப்பித்த நபர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம் கர்ஜியா என்கிற கிராமத்தில் கால்நடை மேய்ப்பராக வேலை செய்து வருபவர் காலு பாய். சமீபத்தில் இவரை ஒரு பெண் சிங்கம் தாக்கியது. சுமார் அரை மணி நேரம் அந்த சிங்கம் அவரை தரையில் அழுத்தி பிடித்து வைத்திருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டு கத்தியும், பல முயற்சிகள் செய்தும் சிங்கம் அவரை விட்டு அகலவில்லை. இப்படியே 30 நிமிடம் போனது. ஒருகட்டத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், பொறுமையாக அமைதி காத்த காலூபாய் அந்த சிங்கத்தின் கழுத்தை மென்மையாக வருடி வருடிவிட்டார். இதைடுத்து சிங்கம் அவரை விட்டு விட்டது.

காலூபாய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிங்கத்திடமிருந்து தப்பித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SWITCH (@zeeswitch)