வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 ஜூன் 2019 (11:07 IST)

குழந்தைகள் தன் ஜாடையில் இல்லை…மனைவி மேல் சந்தேகம் – குழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை !

தனது 4 குழந்தைகளும் தன் ஜாடையில் இல்லை என சந்தேகப்பட்டு கொடூரமான செயல் ஒன்றை செய்துள்ளார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தகப்பன் ஒருவர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹ்டாஷ். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள். ரோஹ்டாஷுக்குத் தன் மனைவி வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளதாகவும் அந்த குழந்தைகள் அனைத்தும் கள்ளத்தொடர்பில்தான் பிறந்ததாகவும் சந்தேகப்பட்டு வந்துள்ளார். மேலும் குழந்தைகள் அனைத்தும் தன் ஜாடையில் இல்லை எனவும் புலம்பியுள்ளார்.

இந்த சந்தேகத்தீ அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக எரிக்க கடந்த ஜூன் 9 ஆம் தேதி தனது 4 குழந்தைகளையும் கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். இதில் அவரது மகன்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். மனைவியும் மகள்கள் இரண்டு பேரும் காயங்களுடன் தப்பியுள்ளார். இதையடுத்து ரோஹ்டாஷ் மேல் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.