1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 14 மே 2020 (20:43 IST)

கூடுதல் பணிக்கு இரட்டிப்பு சம்பளம்- முதல்வர் உத்தரவு

புதுவை தொழிற்சாலைகளில்  பணிபுரியும் ஊழியர்கள் 4 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

புதுச்சேரி மாநில தொழிற்சாலைகளில் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் இரட்டிப்பாக வழங்க வேண்டும். இதுகுறித்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என கூறவில்லை ஆனால்,  4 மணிநேரம் கூடுதலாக வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்