தொடர்புடைய செய்திகள்
- ஒருநாள் இரவில் 1.5 லட்சம் பேர் வெளியேற்றம் – கலங்கும் மருத்துவர்கள்!
- 30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு: முடங்கியது இந்தியா!
- சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை …கியூட் வைரல் போட்டோ
- சென்னை மாநகர பேருந்துகள் திருச்சி வரை இயக்கம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
- நாளை முதல் உள்நாட்டு விமானங்களும் ரத்து: அதிரடி அறிவிப்பு
இரவு முதல் உள்நாட்டு சேவைகளும் ரத்து! தமிழகம் முழு முடக்கம்!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
கொரோனா பாதிப்பு தொடங்கியதையடுத்து கொரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் சென்னை சர்வதேச நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. இதுவரை 350க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட உள்ளது.
உள்நாட்டில் மட்டுமே விமான போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த விமானசேவை நிறுத்தம் அமலாகும். இதனால் இலக்கை அடையும் விமானங்கள் அங்கிருந்து மீண்டும் புறப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
