தொடர்புடைய செய்திகள்
- பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
- பணமதிப்புக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
- 10,000 பேரை கொலை செய்ய உதவிய பெண்ணுக்கு 2 வருடம் சிறைத்தண்டனை!
- சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞருக்கு சிறைத் தண்டனை!
- தாயம் விளையாட்டில் தோற்றதால் கொலை: சென்னை கோர்ட்டு வழங்கிய தண்டனை!
பணமதிப்பிழப்பு செல்லாது: ஒரே ஒரு நீதிபதியின் மாறுபட்ட கருத்து
கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நிலையில் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளியானது என்பதை பார்த்தோம்
5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்த நிலையில் ஒரே ஒரு நீதிபதி மட்டும் பண மதிப்பு செல்லும் என்ற கருத்திலிருந்து மாறுபடுகிறேன் என்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்த ஐந்து நீதிபதிகள் ஒருவராக ஒருவரான நாகரத்னா என்பவர் நாட்டின் மறு உருவமாக நாடாளுமன்றம் விளங்குகிறது என்றும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் ஜனநாயகத்தின் மையமான நாடாளுமன்றத்தை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்
இருப்பினும் பெரும்பான்மை நீதிபதிகளாக 4 பேர் பணமதிப்பிழப்பு செல்லும் என தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
