1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Cowin egistration must for vaccination

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி; முன்பதிவு அவசியம்! – தேசிய சுகாதாரத்துறை அறிவிப்பு!

India
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களில் வேகமாக அதிகரிக்க தொடங்கிய நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியா முழுவதும் மாநில வாரியாக ஊரடங்கு, தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையிலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் அரசின் Cowin.Gov.in தளத்தில் ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் இந்த பதிவு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
கொரோனா சூழலைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் திறக்க முயற்சி – வைகோ கண்டனம்!