வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (16:28 IST)

கொரோனோ நோயாளி தப்பி ஓட்டம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி வருவதை அடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பஞ்சாப் மாநிலம் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் தப்பித்துச் சென்றுள்ளார். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வரும் நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், சீனா சென்ற வெளிநாட்டில் வருவதற்கு மத்திய ரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் தப்பித்துச் சென்றுள்ளார். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஃபரித்காட் நகரில் மருத்துவமனையில் தனியார்டில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது வாலிபர் ஒருவர் தப்பித்து  ஓடியதால் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஓடிய நோயாளியை பிடித்துத் தருமாறு மருத்துவர்கள் போலிஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.