தொடர்புடைய செய்திகள்
- மும்பை மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேர் உடல் கருகி பலி!
- கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடையில்லை! – மத்திய அரசு விளக்கம்!
- இரட்டிப்பு மாற்ற கொரோனா இல்லை.. ஆனா பரவ காரணம் மக்கள்தான்! – சுகாதாரத்துறை செயலாளர் வருத்தம்!
- இந்தியாவுக்கு விரைவில் வரும் Samsung Galaxy S20 FE 5G !!
- கொரோனா தடுப்பூசி போட்ட பின் என்ன செய்யக்கூடாது...?
100 நாட்களுக்கு கொரோனா 2வது அலையின் தாக்கம் !
கொரோனா பாதிப்பு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு எஸ்பிஐ ஆய்வு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,18,46,652 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு எஸ்பிஐ ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், கொரோனாவின் 2வது அலை வரும் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது பாதியில் உச்சம் தொடப் போகிறது என்று தெரியவந்துள்ளது.
மேலும் பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து அடுத்த 100 நாட்களுக்கு 2வது அலையின் தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் தடுப்பூசியானது கொரோனாவை எதிர்கொள்ள முக்கியமான அம்சமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
