1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (19:26 IST)

கேரளாவில் மீண்டும் அதிகரித்த கொரொனா

கொரொனா முதல் அலையைவிட 2 வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் நாள்தோறும் அதிகளவில் கொரொனா தொற்றுப் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில்  அம்மாநிலத்தில் சுமார் 30,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

ஒரேநாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 27,579 பேர் கொரொனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் கேரளாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் அங்கு பொது ஊரடங்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.