தொடர்புடைய செய்திகள்
- நான் எதை தவறவிட்டேன்… இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டி குறித்து சச்சின் ஜாலி ட்வீட்!
- அன்பான நண்பரை இழந்துள்ளேன்..!! மறைந்த விஜயகாந்த் குறித்து பிரதமர் உருக்கம்..!!!
- சென்னை மழை நீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை: மாநகராட்சி திட்டம்!
- அதானி குறித்து ஹிண்டன்பர்க் கூறிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு!
- தனது திருமணம் குறித்து அறிவித்த முரட்டு சிங்கில் பிரேம்ஜி
ராமர் கோயில் திறப்பு விழா குறித்து சர்ச்சை பேச்சு..! பி.கே.ஹரிபிரசாத்தை கைது செய்ய கோரிக்கை..!!
ராமர் கோவில் திறப்பு விழா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத்தை கைது செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
வருகிற ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகாவில் 'கோத்ரா போன்ற சம்பவம்' நடக்க வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
2002 கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு குஜராத்தை மிக மோசமான வகுப்புவாத கலவரங்களில் ஒன்றாக ஆழ்த்தியது என்று அவர் கூறினார். எனவே, கர்நாடகாவில் அசம்பாவித சம்பவங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் கர்நாடக அரசு உஷாராக இருக்க வேண்டும் என்றும் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்தார்.
இந்நிலையில் பிகே. ஹரிபிரசாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் நக்வி முக்தர், வகுப்புவாத சதியின் புழுவாக காங்கிரஸ் மாறி வருகிறது என்று கடுமையாக சாடியுள்ளார். ராமர் கோவில் திறப்பு விழா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஹரிபிரசாத்தை கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
