1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. central govt bring qr code for medicines

மருந்துகளில் QR Code!.. போலிகளை தடுக்க மத்திய அரசு அதிரடி!...

medicine
மக்களின் உயிரை பாதுகாக்கும் மருத்துவத் துறையில் பல மோசடிகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக பலரும் போலி மருந்துகளை தயாரித்து புழக்கத்தில் விட்டு விடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு கூட போலி இருமல் மருந்தை உட்கொண்ட சில குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்துதான் மருத்துவரின் சீட்/பரீசலனை இல்லாமல் இருமல் மருந்து கொடுக்கக்கூடாது என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் அவை மருந்து கடைகளில் கடைபிடிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. இந்நிலையில்தான் போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க அனைத்து வகையான தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள், போதை பொருட்கள், மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மை பேக்கிங்கில் QR Code அச்சிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியிருக்கிறது..

QR Code ஸ்கேன் செய்தால் மருந்தின் விவரங்களை பொதுமக்களை சரி பார்த்துக் கொள்ள முடியும். 2027 ஜூன் ஜூலை 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரவிருக்கிறது.
இதன் மூலம் போலி மருந்துகள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது...