1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Businessman who complained on cow

பசு மாட்டின் மீது புகார் அளித்த தொழிலதிபர்

தொழிலதிபர்
டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் தனக்கு நேர்ந்த விபத்திற்கு காரணமாக இருந்த பசு மாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி மாதா ஷெர்வாலி மார்க்கெட் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பசு மாடு தொழிலதிபரின் வாகனத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலதிபருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து அந்த தொழிலதிபர், விபத்துக்குக் காரணமான  மாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
தந்தையை வெட்டிப் படுகொலை செய்த மகன் கைது